என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு
நீங்கள் தேடியது "முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு"
வேலூர் ஜெயிலில் 21-வது நாளாக முருகன் தொடர்ந்து மவுன விரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் தண்டனை கைதி முருகன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஜெயில் வாழ்க்கையில் ஆன்மீக பாதைக்கு திரும்பிய முருகன் நீளமான தலைமுடி, தாடியுடன் இருக்கிறார்.
கடந்த 23-ந்தேதி முதல் முருகன் சிறையில் மவுன விரதம் இருந்து வருகிறார்.
தொடர்ந்து 21-வது நாளாக இன்றும் மவுன விரதம் இருந்து வருகிறார். கடந்த 5-ந் தேதி நடந்த நளினி முருகன் சந்திப்பின் போது கூட முருகன் காகிதத்தில் எழுதி நளினியிடம் காண்பித்தார்.
ஜெயிலிலும் தனது தேவைகளை ஜெயில் அலுவலரிடம் காகிதத்தில் எழுதி காண்பித்து வருகிறார். மன அமைதி வேண்டி முருகன் 48 நாட்கள் மவுன விரதம் இருக்க போவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X